/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் உடல்
/
மாமல்லை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் உடல்
ADDED : ஜூலை 31, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் கடற்கரை விடுதி அருகில், நேற்று காலை 7:00 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், கடற்கரையில் ஒதுங்கியது. அவரை பற்றிய விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்துரை, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.