/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை - புதுச்சேரி சாலை விரிவாக்கம் பழங்கால கோவில், மண்டபம் பாதிப்பு
/
மாமல்லை - புதுச்சேரி சாலை விரிவாக்கம் பழங்கால கோவில், மண்டபம் பாதிப்பு
மாமல்லை - புதுச்சேரி சாலை விரிவாக்கம் பழங்கால கோவில், மண்டபம் பாதிப்பு
மாமல்லை - புதுச்சேரி சாலை விரிவாக்கம் பழங்கால கோவில், மண்டபம் பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 02:31 AM

மாமல்லபுரம், ஆ
மாமல்லபுரம் பழங்கால விநாயகர் கோவில் மற்றும் யாத்ரீக மண்டபம் ஆகியவற்றை, சாலை விரிவாக்கத்தால் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழங்கால மூதாதையர்கள், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு யாத்திரை சென்றனர். கடலோரப்பகுதி வழியே நடந்து சென்ற அவர்கள் ஓய்வெடுக்க வசதியாக, பல இடங்களில் பாறைக்கற்களில் அழகிய சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன.
நாளடைவில், அவை பயனின்றி போனதால், பராமரிக்கப்படாமல் முற்கால நினைவுச் சின்னங்களாக உள்ளன.
மாமல்லபுரத்தில் பூஞ்சேரி சந்திப்பு அருகிலும், அத்தகைய பழங்கால மண்டபம் உள்ளது. பழமையான சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது.
தற்போது, மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அவற்றை ஒட்டி, செங்கல்பட்டு நோக்கி வாகனங்கள் செல்ல, ரவுண்டானா அமைப்பு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பாலம் கட்டுவதற்கு, மண்டபம் மற்றும் கோவிலை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதைத் தவிர்க்க தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், பழமை பாரம்பரியம் கருதி, மண்டபம் மற்றும் கோவிலை அகற்றுவதை கைவிட்டு, அவற்றிலிருந்து குறுகிய இடைவெளி விட்டு, பாலத்திற்கான துாண்கள் அமைக்கப்பட்டன.
ஆனாலும், மண்டபம் மற்றும் கோவில் வரை சாலை விரிவாக்கப்பட்டுள்ளது. சாலை முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, சாலையோரம் கனரக வாகனம் ஒதுங்கினால், அவற்றின் மீது மோதும் அபாயம் உள்ளது.
தமிழக அரசு துறையினர், அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.