/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்
/
எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்
ADDED : செப் 03, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள் 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற இரு அணிகள், மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பர்.
அந்த வகையில் எம்.ஓ.பி. வைஷ்ணவ், எம்.சி.சி., - 'ஏ' மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன. போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. மூன்று சுற்றுகளிலும் நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.
எம்.சி.சி., - 'பி' மண்டல இணைப்பு அணி, 'ஏ' மண்டல இணைப்பு அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.