/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுார்-- மெல்ரோசாபுரம் சாலை கும்மிருட்டால் வாகன ஓட்டிகள் பீதி
/
கூடலுார்-- மெல்ரோசாபுரம் சாலை கும்மிருட்டால் வாகன ஓட்டிகள் பீதி
கூடலுார்-- மெல்ரோசாபுரம் சாலை கும்மிருட்டால் வாகன ஓட்டிகள் பீதி
கூடலுார்-- மெல்ரோசாபுரம் சாலை கும்மிருட்டால் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : பிப் 10, 2025 02:09 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, கூடலுார் -- மெல்ரோசாபுரம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை வழியாக கோவிந்தாபுரம், கருநிலம் உள்ளிட்ட கிராம மக்கள், மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலை கூடலுார் ஏரிக்கரை மற்றும் சித்தமனுார் ஏரியை ஒட்டி செல்லும் பகுதியில், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை.
இதன் பகுதி இரவு நேரங்களில் பணிக்குச் சென்று வருவோரிடம் அடிக்கடி வழிப்பறி நடைபெறும் பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கூடலுார் ஏரிக்கரையில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் விஷ ஜந்துக்களின் அபாயமும் இந்த பகுதியில் அதிக அளவில் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.