sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

/

6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 25, 2024 11:35 PM

Google News

ADDED : மே 25, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,:திருப்போரூர் அருகே அருங்குன்றம் - -திருநிலை சாலை உள்ளது. இச்சாலை வழியாக மானாமதி சுற்றுவட்டார கிராம மக்கள் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதில், அருங்குன்றம்- - கழினிப்பாக்கம் சாலை பழுதடைந்தது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அருங்குன்றம்- - கழனிப்பாக்கம் சாலை 2.2 கி.மீ., தூரத்திற்கு, முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதில், சிறுபாலம் அமைக்கும் பணி முடிந்தது. அடுத்தகட்ட பணியாக சாலை அமைக்க ஜல்லிக் கற்கல் போடப்பட்டன.

ஆனால், ஆறு மாதங்கள் ஆன நிலையில் இன்று வரை ஜல்லிக் கற்கள் மீது தார் ஊற்றி சாலை அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். வாகனங்களும் பழுதடைகின்றன.

எனவே, பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் உள்ள சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us