sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் முதலியார்குப்பம் வி.ஏ.ஓ., ஆபீஸ்

/

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் முதலியார்குப்பம் வி.ஏ.ஓ., ஆபீஸ்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் முதலியார்குப்பம் வி.ஏ.ஓ., ஆபீஸ்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் முதலியார்குப்பம் வி.ஏ.ஓ., ஆபீஸ்


ADDED : செப் 12, 2024 01:40 AM

Google News

ADDED : செப் 12, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு, எல்லையம்மன் கோவில் - செய்யூர் செல்லும் சாலையில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.

நயினார்குப்பம், ஓதியூர், முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட, 5 கிராமங்களின் வருவாய் கணக்குகள், இங்கு பராமரிக்கப்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலக கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

மழைக்காலங்களில், கட்டடத்தின் உள்ளே மழைநீர் ஒழுகி, நிர்வாகம் சார்ந்த முக்கிய கோப்புகள், அவ்வப்போது சேதம் அடைந்து வருகின்றன.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பாழடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us