sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

/

மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி


ADDED : ஜூலை 11, 2024 10:35 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, கன்னியம்மன் கோவில் தெருவில் வீடுகள் மற்றும் உணவகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து தெற்கு மாடவீதி வழியாக செல்கிறது.

கடந்த 9ம் தேதி இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கன்னியம்மன் கோவில் தெரு, ஓ.எம்.ஆர்., சாலை இணையும் இடத்தில் சிறிய இணைப்பு கழிவுநீர் தொட்டி நிரம்பி, சாலையில் பாய்ந்தது. பின், பேரூராட்சி நிர்வாகம் அடைப்பை சரிசெய்தது.

இந்நிலையில், ஓ.எம்.ஆர்., சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு மாடவீதி, ஓ.எம்.ஆர்., இணையும் இடத்தில் கால்வாய்க்காக கனரக இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்படுகிறது.

இதனால், நேற்று கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கன்னியம்மன் கோவில் தெரு, ஓ.எம்.ஆர்., சாலை இணையும் இடத்தில் உள்ள இணைப்பு கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலையில் பாய்ந்தது.

இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமத்துடன் சென்றனர். எனவே, கழிவுநீர் இணைப்பு தொட்டியை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us