sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்வாய் பணி முடிக்க உத்தரவு

/

கால்வாய் பணி முடிக்க உத்தரவு

கால்வாய் பணி முடிக்க உத்தரவு

கால்வாய் பணி முடிக்க உத்தரவு


ADDED : மே 19, 2024 01:12 AM

Google News

ADDED : மே 19, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை ஏரிகள், மழைக்காலத்தில் நிரம்பி, உபரி நீர் வெளியேறுவதால், அப்பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இப்பிரச்னை ஏற்படுவதால், இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, இரும்புலியூர் ஏரியின் உபரி நீர் கால்வாயில் இருந்து, தாம்பரம் டி.டி.கே., நகர் வழியாக அடையாறு ஆற்றை இணைக்கும் வகையில், 3.8 கி.மீ., துாரத்திற்கு 96.50 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க, அவர் உத்தரவிட்டார்.

நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மகேந்திர குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us