sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் செயல்படாத மேல்நிலை தொட்டி

/

கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் செயல்படாத மேல்நிலை தொட்டி

கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் செயல்படாத மேல்நிலை தொட்டி

கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் செயல்படாத மேல்நிலை தொட்டி


ADDED : மே 01, 2024 01:13 AM

Google News

ADDED : மே 01, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களுக்கு குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பின் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

முறையாக குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படாததால், கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.

இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கும், 150 குடும்பங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாய் இணைப்புகள் ஏற்படுத்தி, புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us