sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்

/

சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்

சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்

சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்


ADDED : ஜூலை 11, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், நேற்றுகாலை 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கிச்சென்றது.

தெள்ளிமேடு அருகே வந்தபோது, சாலை நடுவே இருந்த பள்ளத்தில்வாகனம் ஏறி, இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.

அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கிய ஓட்டுனரை மீட்டனர். டிரைவர் காயமின்றி தப்பினார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த வாகனத்தைமீட்டனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையில் திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பெயர்ந்து உள்ளது.

இச்சாலையில் வழியாகபுதிய வாகனங்கள் செல்லும்போது, ஓட்டுனர்களுக்கு சாலை எங்கு சேதமடைந்துள்ளது என, தெரிவதில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள்கூறினார்.






      Dinamalar
      Follow us