sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை நகரையொட்டிய கிராமங்களில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பீதி

/

செங்கை நகரையொட்டிய கிராமங்களில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பீதி

செங்கை நகரையொட்டிய கிராமங்களில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பீதி

செங்கை நகரையொட்டிய கிராமங்களில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பீதி


ADDED : ஜூன் 20, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், திம்மாவரம், ஆத்துார், வில்லியம்பாக்கம், பாலுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இதில், செங்கல்பட்டில் இருந்து வில்லியம்பாக்கம் வரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலும், தேவனுாரில் இருந்து பாலுார் காவல் நிலைய எல்லையிலும் உள்ளன.

இந்த கிராமங்களில், கடந்த 20 நாட்களாக அடிக்கடி இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

கடந்த 30ம் தேதி இரவு, பாலுாரில் உள்ள மெடிக்கல், பேக்கரி, மளிகைக் கடைகளைத் தொடர்ந்து, வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.

அதே இரவில், வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் உண்டியல் மர்ம நபர்களால் திருடப்பட்டது. ஜூன் 4ம் தேதி, பாலுார் வசந்தம் நகரில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடந்த 13ம் தேதி, திம்மாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, 6 சவரன் திருடப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 18ம் தேதி, ஆத்துார் கிராமத்தில் உஷாராணி என்பவரின் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, 25,000 ரூபாய் பணம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டன.

அதே நாளில், ஆத்துார் கிராமத்தை சேர்ந்த புனிதா என்ற மூதாட்டி கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இவ்வாறு, தொடர் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களால், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

தொடர் திருட்டு சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமங்களில், முன்பு சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் திருடப்பட்டு வந்தன.

சில நாட்களாக, வீடுகளிலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரவு பணி முடித்து செல்வோரை தாக்கி, மொபைல்போன் பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், இந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us