/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதிரி குடிநீர் மினி டேங்க் சீரமைக்க வலியுறுத்தல்
/
பாதிரி குடிநீர் மினி டேங்க் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 02, 2024 01:16 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், பாதிரி ஊராட்சி, மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், மினி டேங்க், ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் வசதி செய்யப்பட்டது.
தற்போது, குடிநீர் மினி டேங்க் பயன்பாடு இன்றி, கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்து, பராமரிப்பு இன்றி உள்ளது. தற்போது, கோடை வெயில் அதிகமாக உள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
மாரியம்மன் கோவில், அம்பேத்கர் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட மூன்று குடிநீர் மினி டேங்க்குகளும் சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது.
இவற்றில், மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் மினி டேங்க்கை, அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் மினி டேங்க்கை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

