sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரவு நேர மின் தடை தொடரும் அவதி மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்த மக்கள்

/

இரவு நேர மின் தடை தொடரும் அவதி மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்த மக்கள்

இரவு நேர மின் தடை தொடரும் அவதி மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்த மக்கள்

இரவு நேர மின் தடை தொடரும் அவதி மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்த மக்கள்


ADDED : மே 11, 2024 11:45 PM

Google News

ADDED : மே 11, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் அறிவிக்கப் படாத மின் தடை பல பகுதிகளில் ஏற்படுகிறது. குறிப்பாக, ஓ.எம்.ஆரில் செம்மஞ்சேரி, ஜவஹர் நகர், பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் சாலை, துரைப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில்அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இரவு நேர மின் தடையால் துாக்கம் தொலைக்கும் மக்கள், மறுநாள் வழக்கமான வேலைகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.

குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர். இதனால், சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்படுகிறது. சைதாப்பேட்டையில் அடிக்கடி சாலை மறியல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், செம்மஞ்சேரியில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மின் மாற்றி முன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மின் தடை ஏற்பட்டால், அந்தந்த துணை மின் நிலையங்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால், அலுவலகத்தில் போன் எடுப்பதில்லை. இளநிலை பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு போன் செய்தாலும், அவர்கள் எடுப்பதில்லை. மின் தடையானால், எப்போது மின் வினியோகம் சீராகும் என்ற தகவல் கூட தெரியாத நிலை ஏற்படுகிறது.

இரவு நேர மின் தடையால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மின் தடை இல்லாத வகையிலும் அப்படியே ஆனாலும், உரிய பதில் கூறும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us