sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சங்குதீர்த்த குளத்தில் உழவார துாய்மை பணி

/

சங்குதீர்த்த குளத்தில் உழவார துாய்மை பணி

சங்குதீர்த்த குளத்தில் உழவார துாய்மை பணி

சங்குதீர்த்த குளத்தில் உழவார துாய்மை பணி


ADDED : மே 11, 2024 11:40 PM

Google News

ADDED : மே 11, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. அதன் முக்கிய தீர்த்தம் சங்குதீர்த்தகுளம். மார்கண்டேய முனிவர், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, இக்குளத்தில் அதிசய சங்கு தோன்றி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுகிறது. கடைசியாக, கடந்த மார்ச் 7ம் தேதி தோன்றியது.

குருபகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசிக்கு பெயரும் நாளில், குளத்தில் புஷ்கரமேளா, லட்சதீப விழா நடக்கும். இத்தகைய குளத்தை முறையாக பராமரிக்காமல் முற்றிலும் மாசடைந்துள்ளது. இதில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை குவிந்து சீர்கேடாக மாறியது.

இதுகுறித்து, ஏப்., 26ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக குளத்தை பார்வையிட்டு, குப்பை கழிவுகளை அகற்றி பராமரிக்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஏற்பாட்டில், சேலம், சதுர்கால பைரவர் உழவாரப் பணி குழுவினர், நேற்று குளத்தில் குவிந்திருந்த பாசி, கொடிகளை அகற்றி துாய்மைப்படுத்தினர். இன்றும் உழவாரப் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us