sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு 'போக்சோ'

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு 'போக்சோ'

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு 'போக்சோ'

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு 'போக்சோ'


ADDED : மார் 12, 2025 09:27 PM

Google News

ADDED : மார் 12, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி,:தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரின் 14 வயது மகள், அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தினமும் பணிக்கு செல்லும் கார் ஓட்டுநர், இரவு தான் வீடு திரும்புவார்.

சிறுமியின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அதே தெருவில் உள்ள அவரது பெரியப்பா வீட்டிற்கு சென்று, வீட்டுப்பாடங்கள் எழுதுவதை சிறுமி வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த 8ம் தேதி, சிறுமி பள்ளி முடிந்து பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவளது பெரியப்பா தன் அறைக்குள் அழைத்துச் சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

வெளியே சென்று வீடு திரும்பிய சிறுமியின் பெரியம்மா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, சிறுமியை தன் கணவரிடமிருந்து மீட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தந்தை, கடந்த 10ம் தேதி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்படி போலீசார் விசாரித்ததில், சிறுமியிடம் அவளது பெரியப்பா பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us