sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மருத்துவமனையில் இருந்து 'கம்பி நீட்டிய' கைதி

/

மருத்துவமனையில் இருந்து 'கம்பி நீட்டிய' கைதி

மருத்துவமனையில் இருந்து 'கம்பி நீட்டிய' கைதி

மருத்துவமனையில் இருந்து 'கம்பி நீட்டிய' கைதி


ADDED : பிப் 28, 2025 11:54 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ராயப்பேட்டை, பி.எம்., தர்கா குடிசை பகுதியைச் சேர்ந்தவர் அண்டா சீனு, 26. இவர், ராயப்பேட்டை காவல் நிலைய பழைய குற்றவாளி.

கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அண்டா சீனுவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெகுநாட்களாக தேடப்பட்டு வந்த சீனுவை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

நேற்று மதியம் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திடீரென தப்பி ஓடிவிட்டார்.

அவரை பிடிக்கும் பணியில் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us