/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
செங்கல்பட்டில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 15, 2024 12:21 AM
செங்கல்பட்டு, :செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.-
இது குறித்து செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுனர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வேலை வாய்ப்பு முகாமில், 8, 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., - ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுனர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
இதில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள், தங்களின் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், 21ம் தேதி காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கும் முகாமில் பங்கேற்கலாம்.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு, 044- - 27426020 மற்றும் 94868 70577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.