/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 20ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
வரும் 20ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 17, 2024 12:24 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
இதில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில், 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், எட்டாம் வகுப்பு முதல், பொறியியல் பட்டாதாரிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
இம்முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு, 044- 2742 6020, 63834 60933, 80567 89359 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.