sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : செப் 03, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மின்சார வசதி, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேலை வாய்ப்பு, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 391 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பின், வருவாய் மற்றும் பேரிடர் துறையில், திருக்கழுக்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த 14 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஐந்து மாணவர்களுக்கு, பட்டப்படிப்பில் சேர, தலா 34,000 ரூபாய் வழங்கப்பட்டது.

மூன்று பயனாளிகளுக்கு, திருமண உதவித்தொகையாக, தலா 20,000 ரூபாயும், கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தினர் இருவருக்கு ஈமச்சடங்குக்காக, தலா 55,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

மாதாந்திர ஓய்வூதிய தொகை பெறுவதற்கு, 10 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் துறையின் வாயிலாக, 29 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் வாயிலாக, ஏழு மாணவர்களுக்கு மட்டை, பந்து, கால்பந்து, கைப்பந்து, இறகு பந்து, செஸ், ஸ்கிப்பிங் ஆகிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப் - 2க்கான இலவச பயிற்சி வகுப்பில், 34 மாணவர்களுக்கு இலவச பாட தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us