sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை சுற்றுலா வளாகத்தில் கழிப்பறை குத்தகை பொது ஏலம்

/

மாமல்லை சுற்றுலா வளாகத்தில் கழிப்பறை குத்தகை பொது ஏலம்

மாமல்லை சுற்றுலா வளாகத்தில் கழிப்பறை குத்தகை பொது ஏலம்

மாமல்லை சுற்றுலா வளாகத்தில் கழிப்பறை குத்தகை பொது ஏலம்


ADDED : செப் 09, 2024 11:51 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணியர் தேவைக்காக, பேரூராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில், கடற்கரை கோவில் அருகில், ஆரோவில் குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் வளாகம் பயன்பாட்டில் உள்ளது.

பேருந்து நிலையம் அருகில், துாய்மை பாரத சுகாதார இயக்கம் - 2.0 திட்டத்தின்கீழ், கழிப்பறை உள்ளது. மேலும், வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தற்காலிக நடமாடும் கழிப்பறைகள் உள்ளன.

பேரூராட்சி நிர்வாகம், நிதியாண்டு அடிப்படையில் பொது ஏலம் நடத்தி, ஆண்டு குத்தகைக்கு தனியாரிடம் அளிக்கும். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக, ஏலம் தவிர்த்து, பேரூராட்சி நிர்வாகமே அவற்றை நடத்தியது.

இந்நிலையில், கடந்த ஜூலை துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் வரை, தனியார் குத்தகைக்கு அளிக்க முடிவெடுத்து, பொது ஏலம் நடத்த முயன்றது.

ஆரோவில் வளாக ஏலத்தில் எவரும் பங்கேற்காததால், பொது ஏலம் நடத்தப்படவில்லை. பிற கழிப்பறைகள் ஏலத்தில், ஆரம்ப கேட்பு தொகை அதிகம் என, எவரும் ஏலம் கோரவில்லை.

இதையடுத்து, தொடர்ந்து ஆறு முறை, பொது ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் பங்கேற்கும் சிலர், ஏல ஆரம்ப கேட்பு தொகையை குறைப்பதற்காக, ஏலம் கோராததால், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டதாக, நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூன்று முறை ஒத்திவைத்தால், நிர்வாகம் ஆரம்ப ஏல கேட்பு தொகையை குறைக்க, அரசிடம் அனுமதி பெறும். இதற்காக ஏலம் கோருவோருக்கு சாதகமாக, தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், கடந்த செப்.,1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான ஏழு மாத குத்தகை அளிக்கப்பட்டுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:

ஆரோவில் கழிப்பறைக்கு 2.18 லட்சம் ரூபாய், துாய்மை பாரத இயக்க 2.0 திட்ட கழிப்பறைக்கு, 37,600 ரூபாய், நடமாடும் நான்கு கழிப்பறைகளுக்கு, தலா 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, குத்தகை அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us