sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆட்சிவிளாகம் திருநங்கையர் குடியிருப்பு ரசாயன சிமென்ட் கலவையால் சீரமைப்பு

/

ஆட்சிவிளாகம் திருநங்கையர் குடியிருப்பு ரசாயன சிமென்ட் கலவையால் சீரமைப்பு

ஆட்சிவிளாகம் திருநங்கையர் குடியிருப்பு ரசாயன சிமென்ட் கலவையால் சீரமைப்பு

ஆட்சிவிளாகம் திருநங்கையர் குடியிருப்பு ரசாயன சிமென்ட் கலவையால் சீரமைப்பு


ADDED : ஜூன் 16, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மதுராந்தகம், கல்பாக்கம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கையர், வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், செய்யூர் அடுத்த கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், அரசு சார்பாக வீடு இல்லாத 50 திருநங்கையருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 50 திருநங்கையருக்கு தலா 8.78 லட்சம் என, மொத்தம் 4 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தரமற்ற நிலையில் இருந்ததால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பல இடங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தன.

இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் கியூப் பிரிவை சேர்ந்த, மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு தொகுப்பு வீடுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தது.

அப்போது, தொகுப்பு வீடுகளின் சுவர்களில், சிமென்ட் பூச்சு வேலை தரமற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக தொகுப்பு வீடுகளின் சுவர்களில் செய்யப்பட்ட சிமென்ட் பூச்சுகள் அகற்றப்பட்டு, மீண்டும் உதிராமல் தடுக்க, 'நிடோபான்ட்' ரசாயனம் கெமிக்கல் கலந்த சிமென்ட் கலவையை கொண்டு, தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us