sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை

/

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 28, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறுதாவூர், ஆமூர், பையனுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

மாணவர்களின் நலனுக்காக, அப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அரசு மாணவர் விடுதி உள்ளது. இதில், 50 மாணவர்கள் தங்கி படிக்கும் அளவிற்கு இட வசதி உள்ளது.

இந்த கல்வியாண்டில், தற்போது 18 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த விடுதிக்கு தனி வார்டன் நியமிக்கப்படவில்லை. அதனால், தற்போது தையூர் விடுதி பெண் வார்டன் ஒருவர், இந்த விடுதியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

அதேபோல, விடுதியில் காவலாளியும் நியமிக்கப்படவில்லை. வனப்பகுதியை ஒட்டி விடுதி அமைந்துள்ளதால்,மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாணவர் களின் கல்வி, பாதுகாப்பு நலன் கருதி, இந்த கல்வியாண்டிலாவது, திருப் போரூர் விடுதிக்கு தனி வார்டன், காவலாளி நியமிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us