sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பர-ம் - செம்பாக்கம் தட பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை

/

தாம்பர-ம் - செம்பாக்கம் தட பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை

தாம்பர-ம் - செம்பாக்கம் தட பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை

தாம்பர-ம் - செம்பாக்கம் தட பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை


ADDED : மார் 11, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:தாம்பர-ம் - செம்பாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தை, மானாமதி வரை நீட்டிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்திலிருந்து தடம் எண் 55 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

இப்பேருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம், கொட்டமேடு வழியாக, செம்பாக்கம் வருகிறது.

மானாமதியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் செம்பாக்கம், கொட்டமேடு, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி பகுதிக்குச் செல்ல, 20 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.

இதனால், அன்றாட தேவைகளுக்கு இப்பகுதிகளுக்குச் செல்வோர், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தடம் எண் 55 அரசு பேருந்தை, மானாமதி வரை நீட்டித்தால், இப்பகுதியினருக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.

பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ- மாணவியர், பணிக்குச் செல்வோர் என, பல்வேறு தரப்பினரும் பயனடைவர். இந்த பேருந்து வசதி ஏற்படுத்தினால், மானாமதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களுக்கு போக்குவரத்து எளிதாகும். எனவே, தாம்பர-ம் - செம்பாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தை, மானாமதி வரை நீட்டிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us