/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை வளைவில் விபத்து அபாயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
சாலை வளைவில் விபத்து அபாயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சாலை வளைவில் விபத்து அபாயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சாலை வளைவில் விபத்து அபாயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : மே 04, 2024 10:38 PM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், வடமணிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டு கிராமம் உள்ளது.
ஒரத்தியில் இருந்து திண்டிவனம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, எட்டிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும் போது கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், இப்பகுதி குடியிருப்பு வாசிகளும், சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் பயணியர் நிழற்குடை இன்றி உள்ளது.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயில் காலங்களில், சாலையில் நின்று பேருந்தில் ஏறி பயணித்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும், பயணியர் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.