/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
ADDED : ஆக 12, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் : மறைமலைநகர் நகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட திருக்கச்சூர் மலைக்கோவில் தெருவில் உள்ள ரமேஷ் என்பவரின் வீட்டின் அருகே, பயன்பாடில்லாத 13 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டி உள்ளது.
இந்த கழிவு நீர் தொட்டி அருகே, நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, தவறி உள்ளே விழுந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி கயிறு வாயிலாக பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.