sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிறந்ததும் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

/

பிறந்ததும் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

பிறந்ததும் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

பிறந்ததும் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு


ADDED : மே 15, 2024 11:36 PM

Google News

ADDED : மே 15, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி பகுதியில், சென்னை மார்க்கத்தில், குப்பை நிறைந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அப்பகுதியில் இருந்த திருநங்கை லட்சுமி என்பவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அப்பகுதிக்கு சென்றார். அங்கு, பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை இருந்தது.

குழந்தையை மீட்ட திருநங்கை, அங்கிருந்தோர் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், குப்பை பகுதியில் இருந்து குழந்தையை மீட்ட திருநங்கையிடம் விசாரித்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், குழந்தையை சுங்கச்சாவடி பகுதியில் போட்டுச் சென்றவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us