/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க தோட்டச்சேரிவாசிகள் வலியுறுத்தல்
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க தோட்டச்சேரிவாசிகள் வலியுறுத்தல்
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க தோட்டச்சேரிவாசிகள் வலியுறுத்தல்
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க தோட்டச்சேரிவாசிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2024 11:07 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட தோட்டச்சேரி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, இங்கு நியாய விலைக் கடை இல்லாததால், 3 கி.மீ., தொலைவில் உள்ள வில்லிப்பாக்கம் நியாய விலை கடையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அதனால், அப்பகுதிவாசிகள் 3 கி.மீ., தொலைவில் உள்ள நியாய விலை கடையில் வாங்கப்பட்ட பொருட்களை, வீட்டிற்கு கொண்டு செல்ல அவதிப்படுகின்றனர்.
ஆட்டோவில் ஏற்றிச் செல்ல, 40 முதல் 60 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நியாய விலை கடைக்கு வந்து செல்ல, முதியவர்கள் மற்றும் பெண்கள் அவதிப்படுகின்றனர்.
அதனால், தோட்டச்சேரி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தோட்டச்சேரி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.