sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரிதாப நிலையில் ஆர்.ஐ., கட்டடம்: புதிய கட்டடம் அமைப்பது எப்போது?

/

பரிதாப நிலையில் ஆர்.ஐ., கட்டடம்: புதிய கட்டடம் அமைப்பது எப்போது?

பரிதாப நிலையில் ஆர்.ஐ., கட்டடம்: புதிய கட்டடம் அமைப்பது எப்போது?

பரிதாப நிலையில் ஆர்.ஐ., கட்டடம்: புதிய கட்டடம் அமைப்பது எப்போது?


ADDED : மே 25, 2024 06:17 PM

Google News

ADDED : மே 25, 2024 06:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் : திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், பையனூர், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் என, ஆறு உள்வட்டங்கள் உள்ளன.

ஒவ்வொரு உள்வட்டத்திலும் ஒரு வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வருவாய் ஆய்வாளர் தங்கி பணிபுரிய குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

கரும்பாக்கம் உள்வட்டத்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தற்காலிகமாக அருகே உள்ள நூலக கட்டடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. அக்கட்டடத்தில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதியும் இல்லை. மேலும், நூலகத்திற்கு வந்து படிக்கும் வாசகர்களுக்கும் இடையூறு உள்ளது.

எனவே, ஊராட்சி ஒன்றிய நிதி அல்லது பொதுப் பணித்துறை மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us