sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை வளைவில் உள்ள மரத்தால் விபத்து அபாயம்

/

சாலை வளைவில் உள்ள மரத்தால் விபத்து அபாயம்

சாலை வளைவில் உள்ள மரத்தால் விபத்து அபாயம்

சாலை வளைவில் உள்ள மரத்தால் விபத்து அபாயம்


ADDED : ஆக 30, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை உள்ளது. இது, புதுச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளன. இதில் சில மரங்கள் சாலையை ஒட்டியே உள்ளன.

சாலை வளைவில் உள்ள மரங்களால், முன்னே செல்லும் வாகனம் மறைக்கப்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, மின் விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

ஆகையால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலையோரத்தில் உள்ள புளியமரங்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us