/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண் அரிப்பால் கந்தலான சாலை செட்டிபுண்ணியத்தில் அபாயம்
/
மண் அரிப்பால் கந்தலான சாலை செட்டிபுண்ணியத்தில் அபாயம்
மண் அரிப்பால் கந்தலான சாலை செட்டிபுண்ணியத்தில் அபாயம்
மண் அரிப்பால் கந்தலான சாலை செட்டிபுண்ணியத்தில் அபாயம்
ADDED : ஆக 31, 2024 01:19 AM

மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் -- கொளத்துார் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, வடகால், செட்டிபுண்ணியம், வெங்கடாபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில், செட்டிப்புண்ணியம் - வெங்கடாபுரம் இடைப்பட்ட பகுதியில், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையின் அடிப்பகுதி சேதமடைந்ததுள்ளது. சாலை சேதமடைந்து இருப்பது தெரியாமல், புதிதாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில், மழைக்காலங்களில் செட்டிபுண்ணியம் ஏரியின் உபரி நீர், இந்த சாலையை கடந்து செல்லும். கடந்த ஆண்டு, அதிக அளவில் வெள்ள நீர் சென்றதால், சாலையின் அடிப்பகுதி சேதமடைந்தது.
சாலையிலும் சில இடங்களில் சேதமடைந்தது காணப்படுகிறது. மேலும், இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து, சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை சரி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.