ADDED : மே 28, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி, : கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, கூடுவாஞ்சேரி தேரடி மேட்டு தெருவைச் சேர்ந்த ரவுடி அப்பளம் தினேஷ், 26, என்பவரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர்.
பின், அவர் செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டார்.