sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அதிசய சங்கு தோன்றிய சூழலிலும் அலங்கோலத்தில் சங்குதீர்த்த குளம்

/

அதிசய சங்கு தோன்றிய சூழலிலும் அலங்கோலத்தில் சங்குதீர்த்த குளம்

அதிசய சங்கு தோன்றிய சூழலிலும் அலங்கோலத்தில் சங்குதீர்த்த குளம்

அதிசய சங்கு தோன்றிய சூழலிலும் அலங்கோலத்தில் சங்குதீர்த்த குளம்


ADDED : ஏப் 26, 2024 12:53 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தக் குளத்தில், இந்த ஆண்டு சங்கு தோன்றிய சூழலிலும், பராமரிப்பின்றி, குப்பை கழிவுகள் சூழ்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது.

ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. அதன் புனித தீர்த்தம் சங்குதீர்த்தகுளம். இதில், கடந்த மார்ச் 7ம் தேதி, புனித சங்கு தோன்றியது. ஒரு வாரத்திற்கும் மேல், பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

இது ஒருபுறமிருக்க, கடந்த ஏப்., 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, சித்திரை பெருவிழா நடந்தது. வெள்ளி அதிகார நந்தியில் வேதகிரீஸ்வரர், பிற சுவாமியர், 63 நாயன்மார் கிரிவலம், பஞ்சமூர்த்தியர் திருத்தேர்களில் உலா ஆகிய முக்கிய உற்சவ நாட்களில், பக்தர்கள் திரண்டனர்.

சங்குதீர்த்த குளத்தில் அக்கறையின்றி, காலி குடிநீர் பாட்டில்கள், பிரசாத தாள்கள் உள்ளிட்ட குப்பையை பக்தர்கள் குவித்து சென்றுள்ளனர். பிற குப்பையும் குளத்தில் வீசப்படுகிறது. குளக்கரை பகுதியினர், துணி துவைத்து மாசுபடுத்துவதும் தொடர்கிறது.

சங்கு தோன்றிய சூழலில், அதன் புனிதம் உணராமல், குளத்தை அசுத்தப்படுத்தி அலங்கோலமாக காணப்படுகிறது. கோவில் நிர்வாகம், இக்குளத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, துாய்மையுடன் பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us