sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு அலுவலகங்கள் அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

/

அரசு அலுவலகங்கள் அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

அரசு அலுவலகங்கள் அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

அரசு அலுவலகங்கள் அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு


ADDED : மே 03, 2024 11:23 PM

Google News

ADDED : மே 03, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:தேவாத்துார் ஊராட்சியில், அரசு கட்டடங்கள் அருகே, கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவாத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் உள்ள பகுதியில், அப்பகுதி குடியிருப்புவாசிகள், கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசி கண்ணதாசன் என்பவர் கூறியதாவது:

தேவாத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, சிலர் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

சாலைப் பகுதிகளில் படுத்து உறங்கும் கால்நடைகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் மற்றும் மாட்டு சாணங்களை, சாலை ஓரம் கொட்டி வருவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us