sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதார சீர்கேடு

/

கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதார சீர்கேடு


ADDED : மே 11, 2024 12:51 AM

Google News

ADDED : மே 11, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும், வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதில், காலை நேரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை, இரவு அல்லது மறுநாள், நகராட்சி குப்பை வண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர்.

தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஜி.எஸ்.டி., சாலை பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் குப்பை கழிவுகளை, உடனே அகற்றாமல், பகல் முழுதும் அப்படியே கிடக்கின்றன.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கழிவு நீர் கால்வாய் துாய்மைப்படுத்திய பின், உடனே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்திய பின், அப்பகுதியில் நோய் தோற்று ஏற்படாமல் இருக்க, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

எனவே, இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us