sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை

/

பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை

பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை

பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 09, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ஆர்த்தி, 30, என்பவருடன் திருமணமாகி, 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இரு குழந்தைகளும், ஒழலுார் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கின்றனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, ஒராண்டாக வேலனும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள், வேலனுடன் வசித்தனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றகுழந்தைகளை, மதியம் உணவு இடைவேளையின் போது, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

பள்ளியில் குழந்தைகள் இல்லாததை கவனித்த ஆசிரியர்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் வேலனுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,ஆசிரியர்களிடம்விசாரணை நடத்திவருகின்றனர்.

பள்ளியின்அருகில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us