sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்

/

செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்

செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்

செம்பாக்கம் -- காட்டூர் சாலை 25 ஆண்டுக்கு பின் விமோசனம்


ADDED : ஆக 23, 2024 02:01 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:தாம்பரம் அடுத்த மேடவாக்கத்தில் இருந்து, செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் வரையுள்ள சாலை 30 கி.மீ., நீளம் உடையது. இச்சாலைக்கு இடையே கோவிலாஞ்சேரி, பொன்மார், காயார், வெண்பேடு, காட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு முன், சென்னை பெருநகர் சாலை மேம்பாடு திட்டத்தில், 30 கி.மீ., சாலை, 6.22 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு, 10 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது.

இதில், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையை ஒட்டிய, செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் -- காட்டூர் இடையே உள்ள 420 மீட்டர் வனப்பகுதி சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மற்ற கிராமங்களில் சாலை அமைக்க, வனத்துறை அனுமதித்தது போல், காட்டூரிலும் சாலையை சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து நம் நாளிதழிலும் தொடர்ந்து செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, திருப்போரூர் பிரிவு சார்பில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய சாலை அமைத்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us