ADDED : மார் 02, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர், திருவான்மியூரைச் சேர்ந்த குமார் மனைவி ராஜேஸ்வரி, 30; ஏழு மாத கர்ப்பிணி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திருவான்மியூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து மரணமடைந்ததாக தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.