sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாய் தேக்கம் ஊரப்பாக்கத்தில் அபாயம்

/

கழிவுநீர் கால்வாய் தேக்கம் ஊரப்பாக்கத்தில் அபாயம்

கழிவுநீர் கால்வாய் தேக்கம் ஊரப்பாக்கத்தில் அபாயம்

கழிவுநீர் கால்வாய் தேக்கம் ஊரப்பாக்கத்தில் அபாயம்


ADDED : ஜூன் 17, 2024 03:06 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி காரணைப்புதுச்சேரி பிரதான சாலை மற்றும் ராஜிவ்காந்தி நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கால்வாயில், கழிவுநீர் தேங்கி உள்ளது.

அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் குப்பைகள் தேங்கியுள்ளன. அவை, கழிவு நீர் கால்வாய்களில் சரிந்து, கால்வாய் அடைபட்டு கழிவுநீர் தேங்கிஉள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை துார் வாரி சீரமைத்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us