sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குழாய் இணைப்பு சீரமைப்பு பணியால் கூடுவாஞ்சேரியில் குடிநீர் பற்றாக்குறை

/

குழாய் இணைப்பு சீரமைப்பு பணியால் கூடுவாஞ்சேரியில் குடிநீர் பற்றாக்குறை

குழாய் இணைப்பு சீரமைப்பு பணியால் கூடுவாஞ்சேரியில் குடிநீர் பற்றாக்குறை

குழாய் இணைப்பு சீரமைப்பு பணியால் கூடுவாஞ்சேரியில் குடிநீர் பற்றாக்குறை


ADDED : ஜூலை 31, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, ஜூலை 31-

நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்டவீடுகள் உள்ளன.

இப்பகுதிக்கு, நகராட்சி சார்பில், குழாய் இணைப்புகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

பராமரிப்பு பணிகாரணமாக, பலமாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நகராட்சி சார்பில், டிராக்டர் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வரும் அந்த குடிநீரை, பணிக்கு செல்வோர்மற்றும் வீட்டில் இருக்கும் முதியோர் பிடித்துபயன்படுத்தஇயலவில்லை.

இதனால் அப்பகுதிவாசிகள் குடிநீருக்காக சிரமம் அடைந்துவருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலை மற்றும் ஐ.ஜி.எம்., சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக குடிநீர் வரவில்லை.

பராமரிப்பு பணிக்காக, ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் அகற்றப்பட்டு பலமாதங்கள் ஆகியும், இதுவரை புதிய குழாய் இணைப்புகள் அமைக்கவில்லை.

மேலும், தெருமுனையில் குடிநீர் தொட்டி அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், அதில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது காரணமாக, அதிலிருந்தும் குடிநீர் பெறமுடியாத நிலை உள்ளது.

எனவே, மின் மோட்டார் பழுதை நீக்கி,குடிநீர் தொட்டிவாயிலாக குடிநீர்வழங்கக்கோரி, நகராட்சிநிர்வாகத்திற்குவேண்டுகோள்தெரிவித்தோம்.

ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எங்கள் பகுதிக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை விரைவில் சீரமைத்தும், பழுதான மின் மோட்டாரை பழுது நீக்கியும், சீராக குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us