/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ADDED : ஜூன் 07, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தலைமை எழுத்தர் மற்றும் சார் - பதிவாளர் - கூடுதல் பொறுப்பு, திலீப் பிரசாத் பணியாற்றி வருகிறார்.
இங்கு, நாள்தோறும் 50 முதல் 100க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை 5:00 மணிக்கு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து, அதிரடியாக சோதனை நடத்தினர்.