sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்

/

சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்

சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்

சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்


ADDED : ஜூன் 14, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் வட்டத்தில், ராயல்பட்டு மதுராபாலுார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தனிநபர் ஒருவர் பட்டா பெற்ற கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, கடந்த மாதம் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இம்மாதம் அதே நில சர்வே எண்ணின், மற்றொரு உட்பிரிவு நிலத்தையும் மேற்கண்டவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரபதிவு செய்யப்பட்டதாக, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் சார் - பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இதுதொடர்பான விசாரணையை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறோம் என, சார் - பதிவாளர் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசாரும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us