/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்
/
சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்
ADDED : ஜூன் 14, 2024 12:17 AM
திருப்போரூர் வட்டத்தில், ராயல்பட்டு மதுராபாலுார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தனிநபர் ஒருவர் பட்டா பெற்ற கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, கடந்த மாதம் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இம்மாதம் அதே நில சர்வே எண்ணின், மற்றொரு உட்பிரிவு நிலத்தையும் மேற்கண்டவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.
ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரபதிவு செய்யப்பட்டதாக, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் சார் - பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இதுதொடர்பான விசாரணையை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறோம் என, சார் - பதிவாளர் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசாரும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.