/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறுவாழ்வு மையத்தில் மகன் தாய் துாக்கிட்டு தற்கொலை
/
மறுவாழ்வு மையத்தில் மகன் தாய் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 29, 2024 10:32 PM
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி கிரிவலப் பாதையை சேர்ந்தவர் ரஞ்சனி, 40. இவரின் கணவர் சீனிவாசன், 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இவருக்கு, 18 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர். மகள் திருப்போரூர் மகளிர் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறார். சென்னையில் உள்ள அவர்களது உறவினர், மாதம் மாதம் குடும்ப தேவைக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர்.
மகனின் மது அருந்தும் பழக்கத்தால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, ரஞ்சனி தன் மகனை குன்றத்துார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். ஆனால், அதன்பின் ரஞ்சனி ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மகள் நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, தாய் ரஞ்சனி துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், ரஞ்சனி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.