/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டு திருத்தம் இன்று சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டு திருத்தம் இன்று சிறப்பு முகாம்
ADDED : மார் 07, 2025 09:57 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஆறு தாலுகாக்களில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.
கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், 8ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தாலுகா கிராமம்
செங்கல்பட்டு சட்டமங்கலம்
மதுராந்தகம் மெய்யூர்
செய்யூர் துாதுவிளாம்பட்டு
திருக்கழுக்குன்றம் விட்டிலாபுரம்
திருப்போரூர் ஆமூர்
வண்டலுார் சோனலுார்