sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்

/

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்


ADDED : ஆக 20, 2024 05:34 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தென் சென்னை, வட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம், இன்று முதல் 23ம் தேதி வரை நடக்க உள்ளது.

தென் சென்னைக்கு, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; கே.கே.நகரில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையம்; அடையாறு புனித லுாயிஸ் செவித்திறன் மற்றும் பார்வைத் திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி; தேனாம்பேட்டை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கும்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்தி செயற்கை அவயங்கள் நிலையம் ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

பார்வை மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் போன், யு.டி.ஐ.டி., அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்று பயன்பெறவும் என, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us