sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடமலைப்புத்துாரில் வேகத்தடை அமைப்பு

/

கடமலைப்புத்துாரில் வேகத்தடை அமைப்பு

கடமலைப்புத்துாரில் வேகத்தடை அமைப்பு

கடமலைப்புத்துாரில் வேகத்தடை அமைப்பு


ADDED : பிப் 25, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் ஊராட்சி உள்ளது.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இது இருசக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் என, வாகன பயன்பாடு நிறைந்த சாலை. அதில், கடமலைப்புத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ளது.

பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவியர் சாலையை கடந்து சென்று வந்தனர்.

அதனால், சில நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.

எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

தற்போது, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலைத் துறையினர், கடமலைப்புத்துார் பள்ளி பகுதியில் வேகத்தடை மற்றும் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளதால், பகுதிவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us