/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளையாட்டு// மாநில வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி
/
விளையாட்டு// மாநில வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி
விளையாட்டு// மாநில வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி
விளையாட்டு// மாநில வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி
ADDED : ஜூலை 27, 2024 07:09 AM

சென்னை : சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில விளையாட்டு போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கின.
இதில் எறிபந்து, வாலிபால், பால் பேட்மின்டன் உட்பட பல்வித போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
'நாக் - அவுட்' முறையில், 30 புள்ளிகள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி மற்றும் அம்பத்துார் சேது பாஸ்கரா அணிகள் மோதின. இதில், 35 - 23 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ஈரோடு குமுதம் அணி, 30 - 10 என்ற கணக்கில், சென்னை மகரிஷி பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் இன்றும் நடக்கின்றன.