sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி

/

விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி

விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி

விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி


ADDED : மார் 06, 2025 10:37 PM

Google News

ADDED : மார் 06, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலூர்:வண்டலுாரில், பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த பிளஸ் 1 மாணவி, சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலுார் கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 12:45 மணியளவில், விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி, கீழே விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக, வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரபீயா பேகம், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கிளாம்பாக்கம் போலீசார், ரபீயா பேகம் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரபியா பேகம் தற்கொலை செய்தாரா அல்லது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us