ADDED : மார் 28, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்:ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 20. அவரது நண்பர் கவுசிக், 20; நேற்று காலை இருவரும், 'யமஹா' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்றனர்.
அப்போது, ஏர்போர்ட் நோக்கி சென்ற லோடு ஆட்டோ மோதியது. இதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற கவுசிக்கிற்கு கால் முறிவு ஏற்பட்டது. ஆகாஷ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீார் வழக்கு பதிந்து, லோடு ஆட்டோ ஓட்டுனர் வினோத், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

