sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு

/

கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு

கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு

கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு


ADDED : செப் 01, 2024 03:57 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : அயனாவரத்தைச் சேர்ந்த ரோஷன், 21, சேத்துப்பட்டு கவுதம், 19, திண்டிவனம் பிரகாஷ், 19, ஆகியோர், சென்னை அண்ணா நகர் தனியார் கலை, அறிவியல் கல்லுாரியில் பி.காம்., இறுதியாண்டு மாணவர்கள்.

மூவரும், கல்லுாரி நண்பர்களுடன் நேற்று முன்தினம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி அருகில், கடலில் குளித்தபோது, மேற்கண்ட மூன்று பேரும் அலையில் சிக்கி மூழ்கினர்.

நண்பர்கள், ரோஷனை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார்.

மற்ற இரண்டு பேர் மாயமாகினர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு, பட்டிபுலம் கடற்கரையில் கவுதம் சடலம், 9:30 மணிக்கு, சூலேரிக்காடு கடற்கரையில் பிரகாஷ் சடலம் கரை ஒதுங்கின. மாமல்லபுரம் போலீசார் அவற்றை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us