sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நீலமங்கலத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலையால் அவதி

/

நீலமங்கலத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலையால் அவதி

நீலமங்கலத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலையால் அவதி

நீலமங்கலத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலையால் அவதி


ADDED : ஜூன் 01, 2024 11:55 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே நீர்பெயர் ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் தெருவில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

சாலையோரத்தில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து மண் அரிப்பு ஏற்பட்டது.

அதனால், அச்சாலையில் வாகனங்கள் செல்லச் செல்ல, நாளடைவில் விரிசல் ஏற்பட்டு, சாலை தற்போது படுமோசமான நிலையில் சேதம் அடைந்து உள்ளது.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், கார், லாரி மற்றும் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us